Sunday, January 9, 2011

லோரியல் இந்தியா அம்பாஸடர்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய பிரீடா

லண்டன்: லோரியல் நிறுவனத்தின் இந்திய பிராண்ட் அம்பாசடராக இருந்து வந்த கண்ணழகி ஐஸ்வர்யாவை ஓரம் கட்டி விட்டு ஸ்லம்டாக் மில்லியனர் நாயகி பிரீடா பின்டோ, அந்த இடத்திற்கு வந்துள்ளார்.


லோரியலி்ன் புத்தாண்டு தொலைகாட்சி விளம்பரத்தில் ஐஸ்வர்யாவைத் தவிர பிறரும் இருந்தனர். அதில் பிரீடா பின்டோவும் ஒருவர். இது ஐஸ்வர்யாவை வியப்பில் ஆழ்த்தியதாம்.

இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்ன நடந்தது என்பதை இனி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரு விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா நடனம் ஆடவிருப்பதால் அவர் அதில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவரால் இந்த விஷயம் பற்றி எதுவும் கூற முடியாது என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா கடந்த 2005-ம் ஆண்டு முதல் லோரியல் அம்பாஸடராக இருக்கிறார். பின்டோ கடந்த 2009-ல் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீடா மூலம் ஐஸ்சுக்கு 'பலூடா' ஐஸ் கொடுத்துட்டாங்களே...!

No comments:

Post a Comment

Google Custom Search