இதற்கு முன் காணாத பெரும் நெருக்கடியில் உள்ளது தமிழ் சினிமா. எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தியேட்டர் பற்றாக்குறை... அல்லது குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தில் திரையரங்குகள் இருப்பது.
நல்ல படங்கள் கூட கட்டாயமாக 1 வாரத்துக்குள் தூக்கப்படும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. உதாரணம் தா எனும் படம். நல்ல படம், ஓரளவு நல்ல கூட்டம் எல்லாம் இருந்தும் இரண்டாவது வாரமே இந்தப்படத்தை தூக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்துகிறார்களே என்று புலம்புகிறார் தயாரிப்பாளர்.
தியேட்டர்கள் தட்டுப்பாடு மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் திட்டமிடல் இன்மையும் கூட இதற்குக் காரணமாக உள்ளது.
வாராவாரம் 4 படங்களுக்குக் குறையாமல் ரிலீஸாகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின்றன. அடுத்த இரு வாரங்களில் மேலும் 8 படங்கள் வெளியாக உள்ளன!
சசிகுமார் இயக்கத்தில் ஈஸன், சக்தி நடித்துள்ள ஆட்ட நாயகன், வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர்களின் நில் கவனி செல்லாதே மற்றும் வாடா போடா நண்பர்கள் ஆகியவை நாளா மறுநாள் வெளியாகவிருப்பவை..
இவற்றில் எந்தப் படம் தேறும், இரண்டு வாரங்களைத் தாக்குப்பிடித்து ஓடும் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது. ஈசன் படம் குறித்து ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், இந்தப் படத்தை அடுத்த வாரம் வெளியாகும் மன்மதன் அம்பு பாதிக்குமோ என்று கவலைப்படுகின்றனர் விநியோகஸ்தர்கள்.
இப்படி வரைமுறையில்லாமல் படங்களை வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்று கதறுகின்றனர் விநியோகஸ்தர்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, பெட்டிக்குள் கிடந்தால் வட்டி கட்டி மாளாது என்று சிணுங்குகின்றனர் தயாரிப்பாளர்கள். இதற்கு தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும் என்று ஒருமித்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது திரையுலகில்!
Wednesday, December 15, 2010
மராத்தி- வங்காளத்திலும் சேனல் தொடங்கும் சன்!
மும்பை: மராத்தி மற்றும் வங்காள மொழிகளில் புதிய சேனல்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது இந்தியாவின் முன்னணி டிவி நெட்வொர்க்கான சன் குழுமம்.
தென்னிந்தியாவின் அசைக்க முடியாத தொலைக்காட்சி குழுமமாகத் திகழ்வது கலாநிதி மாறனின் சன் நெட்வார்க்.
ஆனால் இன்னமும் வடக்கில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை இந்த நிறுவனம். இப்போது, வடக்கிலும் சேனல்கள் துவங்க முடிவெடுத்துள்ளது.
ஹிந்தி மொழி தவிர்த்து, பிற மாநில மொழிகளில் சேனல்களைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, மராத்தி மற்றும் வங்க மொழியில் சேனல்களைத் துவங்கவிருக்கிறார்கள்.
"தென் மாநில மொழி சேனல்கள் தவிர்த்து, வடக்கில் மாநில அளவில் சேனல்கள் துவங்குவதில் நாங்கள் ஆர்வமாக இருப்பது உண்மைதான். ஆனால் பொருத்தமான நேரத்துக்கு காத்திருக்கிறோம்" என்றார் சன் குழுமத்தின் சிஇஓ அஜய் வித்யாசாகர்.
ஏற்கெனவே டிவி 18 குழுமத்துடன் இணைந்து சன் 18 என்ற பெயரில் தொலைக்காட்சி சேவையில் ஈடுபட்டுள்ளது சன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வடக்கில் புதிய சேனல்களைத் துவங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் அசைக்க முடியாத தொலைக்காட்சி குழுமமாகத் திகழ்வது கலாநிதி மாறனின் சன் நெட்வார்க்.
ஆனால் இன்னமும் வடக்கில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை இந்த நிறுவனம். இப்போது, வடக்கிலும் சேனல்கள் துவங்க முடிவெடுத்துள்ளது.
ஹிந்தி மொழி தவிர்த்து, பிற மாநில மொழிகளில் சேனல்களைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, மராத்தி மற்றும் வங்க மொழியில் சேனல்களைத் துவங்கவிருக்கிறார்கள்.
"தென் மாநில மொழி சேனல்கள் தவிர்த்து, வடக்கில் மாநில அளவில் சேனல்கள் துவங்குவதில் நாங்கள் ஆர்வமாக இருப்பது உண்மைதான். ஆனால் பொருத்தமான நேரத்துக்கு காத்திருக்கிறோம்" என்றார் சன் குழுமத்தின் சிஇஓ அஜய் வித்யாசாகர்.
ஏற்கெனவே டிவி 18 குழுமத்துடன் இணைந்து சன் 18 என்ற பெயரில் தொலைக்காட்சி சேவையில் ஈடுபட்டுள்ளது சன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வடக்கில் புதிய சேனல்களைத் துவங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்லம்டாக் படத்திற்காக ஒரிஜினல் இசைப் பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான்.
44 வயதான ரஹ்மான், ஸ்லம்டாக் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம்.
ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.
Monday, December 13, 2010
மன்மதன் அம்பு படத்துக்கு யு!
காமம் ததும்பும் பாட்டு, பாலுணர்வுக் குறியீடான தலைப்பு என பலரது எதிர்ப்பையும் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்துவிட்ட கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதன் மூலம் இந்தப் படம் அனைவரும் பார்க்கத்தக்கதே என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 23-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸன்- த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் அவர் இந்தப் படத்தை வெளியிடவில்லை. ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது
இதன் மூலம் இந்தப் படம் அனைவரும் பார்க்கத்தக்கதே என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 23-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸன்- த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் அவர் இந்தப் படத்தை வெளியிடவில்லை. ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது
3 இடியட்ஸ்... விஜய்க்கு பதில் சூர்யா?
ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து விஜய் விலகிவிட்டார் அல்லவா... இப்போது அவருக்குப் பதில் இந்த பாத்திரத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என புரியாத அளவுக்குப் பேசி குழப்பினார்.
இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய சூர்யா, "இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.." என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அட, யார்தான் நடிக்கிறீங்கன்னு சொல்லித் தொலைங்கப்பா... பெரிய ராணுவம் ரகசியம் பாருங்க!
Subscribe to:
Posts (Atom)

