Wednesday, December 8, 2010

முன்னணி நடிகை அனுஷ்கா மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. தமிழில் 'இரண்டு' எனும் படத்தில் சுந்தர் சியால் அறிமுகமான இவர், வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது, வானம், தெய்மகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் நிலம் ஒன்றை புரோக்கர்கள் மூலம் வாங்கினார். அமெரிக்காவில் வசிக்கும் லிங்கமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தை புரோக்கர்கள் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளனர். இது தெரியாமல் அவர் நிலத்தை வாங்கி உள்ளார். 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பிய லிங்கமூர்த்தி தனது நிலத்தை போலி ஆவணம் மூலம் அனுஷ்கா வாங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் டீமேலி நீதிமன்றத்தில் அனுஷ்கா மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா நடிகை அனுஷ்கா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்.

No comments:

Post a Comment

Google Custom Search