Wednesday, December 8, 2010

13 புதுமுகங்களுடன் களமிறங்கும் செல்வா!

நான் அவனில்லை படத்துக்குப் பிறகு 13 புதுமுகங்களுடன் களமிறங்குகிறார் இயக்குநர் செல்வா.

நாங்க என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை நிகழ்காலத்தில் துவங்கி எண்பதுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.


இந்த 13 பேரில் 5 பேர் இந்தப் படத்தின் ஹீரோக்கள். நான்கு ஹீரோயின்கள், இரண்டு வில்லன்கள், இரண்டு காமெடியன்கள்.

இதுகுறித்து செல்வா கூறுகையில், "புதியவர்களை அறிமுகப்படுத்துவது எனக்குப் புதிதில்லை. அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து தொடர்கிறது. இப்போது அறிமுகமாகவிருக்கும் 13 பேருமே இதே துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது", என்கிறார்.

இந்தப் படம் செல்வாவின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google Custom Search