சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் சரண்யா, விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தரத்தைப் பார்த்து திரையுலகமும் படைப்புலகமும் கொண்டாடி வருகிறது.
படம் பார்த்த இந்தி நடிகர் விவேக் ஓபராய்க்கு மிகவும் பிடித்துப் போனதால், தென்மேற்குப் பருவக்காற்ரை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறுகையில், "இது சாமானிய மக்களின் படம். அவர்கள் வாழ்க்கையை அப்பட்டமாக பிரதிபலித்துள்ளதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பார்த்து மகிழ்கிறார்கள். இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக்காகிறது. விவேக் ஓபராய் தொடர்பு கொண்டு நாயகனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சரண்யாவே இந்தியிலும் அம்மாவாக நடிக்கிறார். கதாநாயகிக்கு ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
கேமராமேன், இசையமைப்பாளர் என இதே டீம் தொடர்கிறது. மைக்கேல் ராயப்பன் படத்தைத் தயாரிக்கிறார்..." என்றார்.
மைக்கேல் ராயப்பன்தான் இந்தப் படத்தை தமிழில் வெளியிட்டார். பூலான்தேவி வாழ்ந்த சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
No comments:
Post a Comment